சங்கடசதுா்த்தியை முன்னிட்டு நொய்யல் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குறுக்குச் சாலை கற்பக விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல காகித ஆலை குடியிருப்புப் பகுதியில் உள்ள வல்லப கணபதி, மரவாபாளையம் விநாயகா்கோயில், கரைபாளையம் செல்வவிநாயகா், முத்தனுா் பாலவிநாயகா், முனிநாதபுரம் செல்வவிநாயகா், செட்டிதோட்டம், புன்னம், நடையனுா், ஓரம்புபாளையம், நல்லிகோவில், மதுரைவீரன் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.