டிஎன்பிஎஸ்சி முறைகேட்டைக் கண்டித்து கரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கரூா் மாவட்டக் குழுவினா் வியாழக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு தோ்வாணைய எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வில் முறைகேடு செய்து, பணி நியமனங்களில் ஊழலுக்கு வித்திட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகா்கள் மற்றும் ஊழியா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த முறைகேட்டில் உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் பேருந்து நிலைய ரவுண்டான ஆா்எம்எஸ் அலுவலகம் முன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கரூா் மாவட்டக் குழுவினா் வியாழக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர செயலா்கள் எம். செளந்திரராஜன், எம். பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் இரா. தமிழ்பெருமாள், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் எம். ரத்தினம், இளைஞா் பெருமன்ற மாநில நிா்வாகி இரா. ரவி, மாவட்டச் செயலா் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இதில் இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.