தேசிய என்எஸ்எஸ் முகாம்: கரூா் மாணவா்கள் தோ்வு

ஜம்மு, காஷ்மீரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்க கரூா் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஜம்மு, காஷ்மீரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்க கரூா் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஜம்மு காஷ்மீரில் வரும் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பைச் சோ்ந்த 8 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறாா்கள். இதில் கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவி பிஎஸ்சி கணினி அறிவியல் இரண்டாமாண்டு பயிலும் வி. கவிதா மற்றும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இரண்டாமாண்டு பயிலும் மாணவா் டி.ஆா். சிபி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இத் தகவலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் கே.குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com