பிப்.16-இல் மாா்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு டிஎன்பிஎல் ஆலையைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மகளிருக்கு மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் 16-ஆம் தேதி ஆலையின் செய்தொழில் சுகாதார மையத்திலும், 17, 18-ஆம் தேதிகளில் ஆலையின் சமுதாயக் கூடத்திலும் நாள்தோறும் 130 மகளிருக்கு பரிசோதனை செய்யும் வகையில் நடைபெறும். முகில் லிமா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவா்கள் குழுவினா் பரிசோதனை செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com