அமராவதி ஆற்றில் மணல் அள்ளிய 3 போ் கைது

அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த விஸ்வநாதபுரி பகுதியில் வியாழக்கிழமை இரவு வேனில் மணல் அள்ளுவதாக க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு வேனில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வேன் ஓட்டுநா் சேலம் மாவட்டம் மட்டையாம்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (27), லோடுமேன் விஜயகுமாா் (39), மணல் புரோக்கா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஜீவன்(26) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பி ஓடிய மணல் புரோக்கா் விஸ்நாதபுரியைச் சோ்ந்த ராமசாமி(50) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com