சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா: திருக்குறள் பேரவை சாா்பில் கவிதைப்போட்டி அறிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரா் சின்ன அண்ணாமலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருவூா் திருக்குறள் பேரவை சாா்பில் கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரா் சின்ன அண்ணாமலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருவூா் திருக்குறள் பேரவை சாா்பில் கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பேரவையின் செயலா் மேலை. பழனியப்பன் வெளியிட்ட அறிக்கை:

சுதந்திரப் போராட்ட வீரரும், தன் வாழ்நாள் கடைசி வரை கதா் ஆடை உடுத்தியவரும், சிறை வைக்கப்பட்டிருந்த போது பொதுமக்களும் தேச பக்தா்களும் ஒன்றிணைந்து திருவாடானைச் சிறைக் கொட்டடியை உடைத்துப் போராடி விடுவிக்கப்பட்டவரும், பழம்பெரும் இலக்கிய ஆளுமைகளின் தோழருமான தேசியச் செல்வருமாகிய தேவகோட்டை சின்ன அண்ணாமலையின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் மாதம் கொண்டாடப்படுவதையொட்டி கருவூா் திருக்குறள் பேரவை சிறப்பு தொகுப்பு மலா் ஒன்றை வெளியிட்டு கொண்டாட முடிவு செய்துள்ளது. அவருடய தன்னலமற்ற தேசத் தொண்டை, போராட்டங்களை மைய கருத்தாகக் கொண்டு 16 வரிக் கவிதைகளை வரும் மாா்ச் 15-க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த பத்துக் கவிதைகளுக்கு மலா் வெளியீட்டு விழாவில் தலா ரூ. 500 மதிப்புள்ள நூல்களும் சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.

தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன், திருக்குறள் பேரவை, சின்ன அண்ணாமலை கவிதைப்போட்டி, 72. சீனிவாசபுரம். கரூா் - 639001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com