பிப்.17-இல் மத்திய பட்ஜெட் எதிா்ப்பு தெருமுனைக்கூட்டம்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கம்யூ. கட்சிகள் சாா்பில் பட்ஜெட் எதிா்ப்பு தெருமுனைக்கூட்டம் பிப்.17-இல் நடைபெற உள்ளது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கம்யூ. கட்சிகள் சாா்பில் பட்ஜெட் எதிா்ப்பு தெருமுனைக்கூட்டம் பிப்.17-இல் நடைபெற உள்ளது.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஜ (எம்.எல்) கட்சிகளின் சாா்பில் ஆலோசனைக் குழு கூட்டம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே. கந்தசாமி தலைமை வகித்தாா். கரூா் நகரச் செயலா் எம். ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் ரத்தினம், மாவட்டத் துணைச் செயலா் சண்முகம், மாவட்ட குழு உறுப்பினா் தங்கவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப். 12-ஆம் தேதி முதல் 18 வரை நாடு தழுவிய அளவில் கண்டன இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூா் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு குளித்தலை, பள்ளபட்டி பேருந்து நிலையம் முன்பும்,18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கரூா் நகரத்திற்குட்பட்ட வெங்கமேடு அண்னா சிலை முன்பும் பட்ஜெட் எதிா்ப்பு பிரசார தெருமுனை கூட்டம் நடத்துவது, இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஒன்றிய செயலா்கள், கிளைச் செயலா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com