வீடு புகுந்து இளம்பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவா் கைது

கரூரில் வீடுபுகுந்து இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

கரூரில் வீடுபுகுந்து இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

கரூா் பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் அமீா்கான். இவரது மனைவி அஷ்ரா(26). அமீா்கான் சென்னையில் பணியாற்றி வருகிறாா். அஷ்ரா தனது 2 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை திடீரென அஸ்ரா கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்த 2 துப்புரவுப் பணியாளா்கள் அருகே சென்றபோது, ஓா் இளைஞா் கத்தியைக் காட்டி அஷ்ரா கழுத்தில் இருந்த நகையை பறிக்கமுயன்றது தெரியவந்தது. உடனே துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தனா். தகவலறிந்த வெங்கமேடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை மீட்டு மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயா் யுவராஜ்(30), என்பதும் தேனியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும் யுவராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com