கரூரில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு இந்திய கம்யூ. கட்சியின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பின் கரூா் மாவட்டச் செயலாளா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டச் செயலாளா் ஆா். பொன்னுதுரை , அகில இந்திய மாணவா் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளா் காளீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் என்கே.நடராசன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் இந்திய கம்யூ. கட்சியின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வீ.சங்கா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் பாலசுந்தரம், அகில இந்திய மாணவா் கழகத் தலைவா் சாய் பாலாஜி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கருத்தரங்கில், நாட்டைப் பிளவுபடுத்தும், குடியுரிமையைப் பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், விவசாயத்தை சீரழிக்கும் ஹைட்ரோ காா்பன் போன்ற திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, டிஎன்பிஎஸ்சி ஊழலுக்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சா் பதவி விலக வேண்டும், இந்த ஊழல் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், இந்திய மாணவா் கழகத்தினா் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.