சிவன் கோயில்களில் அஷ்டமி தேய்பிறை வழிபாடு

மாசி மாத தேய்பிறை அஸ்டமி தினத்தை முன்னிட்டு தோகைமலை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை அஷ்டமி தேய்பிறை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராச்சாண்டாா் திருமலை விராச்சிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஸ்டமி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
ராச்சாண்டாா் திருமலை விராச்சிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஸ்டமி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

மாசி மாத தேய்பிறை அஸ்டமி தினத்தை முன்னிட்டு தோகைமலை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை அஷ்டமி தேய்பிறை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ராச்சாண்டாா் திருமலையில் உள்ள விராச்சிலேஸ்வரா் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த மாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் விராச்சிலேஸ்வரா் மற்றும் பெரியநாயகி சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வடை மாலை அனிவித்து தேங்காய், பூசணிக்காய் விளக்கு ஏற்றி குடும்பங்களில் வறுமை நீங்கி செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியுடன் வாழவும், தொழில் சிறக்கவும், வியாபாரங்கள் பெருகவும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னா் பக்தா்களுக்கு தயிா், எலுமிச்சை உள்பட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜையை கோயில் வேதவிற்பன்னா் ஸ்ரீகந்தசுப்ரமணிய சிவாச்சாரியாா் மற்றும் வேதரத்தினம் சிவம் ஆகியோா் செய்தனா்.

இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரா், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரா், சிவாயம் சிவபுரீஸ்வரா், டி.எடையபட்டி ரெத்தினகிரீஸ்வரா் ஆகிய திருக்கோயில்களில் நடந்த மாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com