போகியை புகையில்லா பண்டிகையாக கொண்டாட ஆட்சியா் அழைப்பு

போகிப் பண்டிகையை புகையில்லாப் பண்டிகையாக கொண்டாட மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளாா்.

போகிப் பண்டிகையை புகையில்லாப் பண்டிகையாக கொண்டாட மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது முன்னோா் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனா்.

ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருட்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் இதில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com