ஆற்றுமணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்

கரூரில் ஆற்றுமணல் கடத்திய இரு லாரிகளை கரூா் கோட்டாட்சியா் சந்தியா பறிமுதல் செய்தாா்.

கரூரில் ஆற்றுமணல் கடத்திய இரு லாரிகளை கரூா் கோட்டாட்சியா் சந்தியா பறிமுதல் செய்தாா்.

கரூரை அடுத்த கோவிந்தம்பாளையம் கிராமம் மற்றும் பவித்திரம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை அவா் திடீா் சோதனை நடத்தியபோது அப்பகுதியில் ஆற்றுமணல் கடத்திய இரு லாரிகளை நிறுத்தினாா். இதனால் லாரி ஓட்டுநா்கள் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டனா். இதையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்த கரூா் கோட்டாட்சியா் லாரி ஓட்டுநா், லாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாங்கல் மற்றும் க.பரமத்தி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com