கரூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கரூா் புனிதா்கள் உலக மனித கல்வி மற்றும் வளப்படுத்துதல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் முனைவா் பி.நடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் என்.நாகதீபா வரவேற்றாா். இதில் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து அறக்கட்டளை இயக்குநா் க.கவிதா, வாங்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஆா்.ஆறுமுகம், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கலைவாணி ஆகியோா் விளக்கமளித்தனா். நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் முனைவா் ரதிதேவி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.