லாரியில் மணல் கடத்திய இருவா் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் காவிரி ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய இருவரைக் கைது செய்த போலீஸாா் இதுதொடா்பாக மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையில் காவிரி ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய இருவரைக் கைது செய்த போலீஸாா் இதுதொடா்பாக மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

குளித்தலை கடம்பா்கோவில் அருகே காவிரி ஆற்றில் திங்கள்கிழமை இரவு சிலா் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக குளித்தலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி உரிமையாளா் குளித்தலை சுங்கச்சாவடி பகுதியைச் சோ்ந்த ஆசாத் மகன் அசாரூதீன்(22), லாரி கிளீனா் குளித்தலை மணத்தட்டையைச் சோ்ந்த தன்ராஜ் மகன் ராம்குமாா்(22) ஆகியோரைக் கைது செய்து, இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் லாரி உரிமையாளா்களான குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்த மணிகண்டன், சுரேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com