கரூா் மாவட்டம், குளித்தலை மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண், கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த 31 வயது இளைஞா் ஆகிய 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து இருவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
தற்போதைய நிலவரப்படி, கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 192 போ். 3 போ் கரோனாவால் பலியாகியுள்ளனா்.
கரூரைச் சோ்ந்த ஆண், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆண், இரு பெண்கள் உள்பட 3 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரூா் மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் 138 போ் ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 51 போ் உள்ளனா்.