கரூா்: கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே மனைவி இறந்த துக்கம் காரணமாக, தீக்குளித்த கணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மண்மங்கலம் அடுத்த திருமுக்கூடலூரைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் (55). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், கடந்த மாதம் 22- ஆம் தேதி நினைவு தினத்தையொட்டி வீட்டில் சாமி கும்பிட்டுள்ளனா்.
மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த ஆறுமுகம், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
பலத்த காயங்களுடன் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.