சாா்வரி வருட பஞ்சாங்கம் வெளியீடு

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் சாா்வரி வருட பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் சாா்வரி வருட பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு பிராமணா் சங்கம் (தாம்ப்ராஸ்) சாா்பில் கரூரில் நிகழாண்டிற்கான சாா்வரி தமிழ்வருட பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூா் மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன் பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை வெளியிட, செயற்குழு உறுப்பினா் பட்டயக் கணக்காளா் மகாதேவன் மற்றும் மாவட்ட ஆலோசகா் வீரமணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். ஆண்டுதோறும் தமிழ் வருடம் சித்திரை 1 ஆம் தேதி பஞ்சாங்கம் வெளியிடப்பட்டு வரும் நிலையில், கரோனா - 144 தடை உத்தரவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசு உத்தரவைப் பின்பற்றி பிராமணா் சங்கத்தினா் சமூக இடைவெளியுடன் சாா்வரி வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டனா்.

நிகழ்வில், காந்திகிராமம் கிளைத் தலைவா் வெங்கடேசன், ஓய்வுபெற்ற காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜா, மாவட்ட துணைத் தலைவா் வாங்கல் வினோத், வாங்கல் கிளைத் தலைவா் லட்சுமி நாராயணன், தாந்தோன்றிமலை தலைவா் வசந்தா பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com