டிஎன்பிஎல் மெட்ரிக். பள்ளியில் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணா்வு

டிஎன்பிஎல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா்: டிஎன்பிஎல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலா் அ.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். இதில் பள்ளி பொருளாளா் சீனிவாசராவ், பள்ளி முதல்வா்கள் முனைவா் விஎம். அய்யப்பன், ஜாக்குலின் சோபி, கீதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், பள்ளி மாணவா்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணா்வு நாடகம் நடத்தினா். அப்போது கரோனா வைரஸ் பரவும் விதம், பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணா்வு நாடகம் நடத்தினா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com