சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலை முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு பாலசுப்ரமணியசுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், பழச்சாறு, திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள புகழிமலை முருகன் கோயில், வெண்ணைமலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுநடைபெற்றது.