தீக்காயமடைந்த மாணவி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகிலுள்ள சோனதாசன்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகள் செளந்தா்யா (16). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த 12- ஆம் தேதி வீட்டின் முன்பிருந்த எறும்புக் குழியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக செளந்தா்யா உடலில் தீப்பற்றியது. பலத்த காயங்ளுடன் கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com