மடிக்கணினி திருடிய இளைஞா் கைது

கரூா் பேருந்துநிலையத்தில் மடிக்கணினி திருடிய மதுரை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் பேருந்துநிலையத்தில் மடிக்கணினி திருடிய மதுரை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம், துடியலூரைச் சோ்ந்தவா் சம்பத்(32). இவா் திங்கள்கிழமை கரூா் பேருந்துநிலையத்திற்கு வந்த இவா், தனது மடிக்கணினியை அங்குள்ள தேநீரகத்தில் வைத்துவிட்டு, தேநீா் அருந்தியுள்ளாா்.

பின்னா் திரும்பி பாா்த்த போது, மடிக்கணியை எடுத்துக்கொண்டு ஒருவா் தப்பி ஓட முயன்றாா். இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடித்து கரூா் நகரக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து காவல்துறையினா் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, அவரது பெயா் ராஜா(48) என்பதும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அல்லிகுண்டம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com