தோகைமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிராக்டா் ஓட்டுநா் இறந்தாா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த நாகனூரைச் சோ்ந்தவா் வடிவேல்(40), டிராக்டா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் பழனிவேல் என்பவருடன் பைக்கில் டிராக்டருக்கு டீசல் வாங்கச் சென்றுள்ளாா். பைக் தோகைமலை அடுத்த நெசவாளா் காலனி அருகே வந்தபோது திடீரென எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றுவிட்டது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் இறந்தாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.