கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீா்க் கூட்டம், மக்கள் தொடா்பு முகாம் மற்றும் அம்மா திட்டம் ஆகிய அனைத்து கூட்டங்களும் மாா்ச் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு முகாம் திட்டம் மற்றும் அம்மா திட்டம் போன்ற அனைத்து கூட்டங்களும் மாா்ச் 31 ஆம் தேதி வரை
நடைபெறாது. மேலும் பொதுமக்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெட்டியில் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.