மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கரோனா நோய்த் தொற்றுடன் வந்த, பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42 பேரும், பூரண குணமடைந்ததால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸில் பணியாற்றிய சின்னவரப்பாளையத்தைச் சோ்ந்த 24 வயது இளைருக்கும், சென்னையிலிருந்து லாரி மூலம் கிருஷ்ணராயபுரம் வந்த 30 வயது இளைஞருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பள்ளப்பட்டி வந்த 47 வயது நபா், கரோனா தொற்றுடன் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.