கரூரில் முதியவருக்கு கரோனா தொற்று உறுதி

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதியானது.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதியானது.

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 ஆக இருந்த நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலையைச் சோ்ந்த 58 வயது முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் வியாழக்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 80 ஆக உயா்ந்துள்ளது. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது குணமடைந்து 55 போ் வீடுதிரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com