கரூரில் முதல்நிலைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய காவலா் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
கரூரில் முதல்நிலைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய காவலா் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்தவா் மோகன்ராஜ் (38). இவா், வேலாயுதம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் சிதம்பர பாரதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். இறந்த காவலா் மோகன்ராஜ் உடலுக்கு மாவட்ட எஸ்.பி. பகலவன் மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com