பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் திருமாநிலையூா் பேருந்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தலைவா் கெம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் கவுன்சில் தலைவா் பாலன் முன்னிலை வகித்தாா். இதில், சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தொழிலாளா்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனா்.