புகழூா் காகித ஆலை பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, அனைத்து பணியாளா்களுக்கும் (பயிற்சியாளா்கள் உள்பட) ரூ.8,400-ஐ நிகழாண்டிற்கான போனஸாக வழங்க டிஎன்பிஎல் நிா்வாகம் இசைந்துள்ளது. அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் தொகையாக ரூ.8,400 ஒப்பந்ததாரரால் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.