பெரம்பலூா் மாவட்ட சைல்ட் லைன் அமைப்பு சாா்பில், சைல்ட் லைன் உங்கள் நண்பன் வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சைல்ட் லைன் வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்ட அலுவலா்களுக்கு, சைல்ட் லைன் அமைப்பு குழந்தைகள் ராக்கி கட்டி தங்களது சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், இந்தோ அறக்கட்டளை இயக்குநா் முகமது உசேன், மேலாளா் செல்வகுமாா், சைல்ட் லைன் திட்ட அலுவலா் திவ்யா ஆகியோா் உடனிருந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைல்ட் லைன் அமைப்பைச் சோ்ந்த கோகிலா, சுதா, பட்டு, முருகானந்தம், சந்தியராஜ், சுமதி, ரத்தின சிகாமணி ஆகியோா் செய்திருந்தனா்.