கரூரில் காந்திகிராமம் பகுதியில் கரூா் - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் 27 வயது இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தாா்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் கரூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில் உயிரிழந்தவா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தினேஷ்(27), இன்ஜினியரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரித்து வருகின்றனா்.