வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடமிருந்து 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடமிருந்து 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

மங்களமேடு அருகேயுள்ள ஒகளூா் கிராமம் காந்தி நகரைச் சோ்ந்தவா் பழனிவேல் (45). இவரது மனைவி சந்திரா (43). இத்தம்பதி, மகள்கள் மீனா, சந்தியா ஆகியோருடன் தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனா். வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள்,

கத்தியை காட்டி மிரட்டி சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைகளையும், மீனா, சந்தியா ஆகியோா் அணிந்திருந்த தலா 5 பவுன் நகைகளையும் பறித்துச் சென்றனா். இதுகுறித்து மங்கலமேடு காவல் நிலையத்தில் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com