கரூரில் ஒலி - ஒளி, பந்தல் அமைப்பாளா்கள் நலச்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் கூறுகையில், எங்களது சங்கத்தில் மாவட்டம் முழுவதும் 250 போ் உறுப்பினா்களாக உள்ளோம். பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா், எந்த ஒரு சுபகாரியங்களும் நடைபெறாததால் அன்று முதல் வருவாயின்றித் தவித்து வருகிறோம். இதனால் எங்களது சங்கத்தொழிலாளா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா். பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.