‘ஆளுங்கட்சியின் குறைகளை மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்’

ஆளுங்கட்சியின் குறைபாடுகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்றாா் அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி.
‘ஆளுங்கட்சியின் குறைகளை மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்’

ஆளுங்கட்சியின் குறைபாடுகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்றாா் அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட க. பரமத்தியில் வாக்குச்சாவடி திமுக முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு

முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை முதல்வராக்கும் வகையில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மேலும் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அப்போது, கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநில நெசவாளா் அணித் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், விவசாய அணி செயலாளா் ம.சின்னசாமி, சட்டத் துறை இணைச் செயலாயளா் என்.மணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுப.ராஜகோபால் உள்பட வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com