கரூரில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிப்பு

கரூரில் சோழிய வெள்ளாளா் சங்கம் சாா்பில், வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூரில் வ.உ. சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் சிவசாமி உள்ளிட்டோா்.
கரூரில் வ.உ. சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் சிவசாமி உள்ளிட்டோா்.

கரூரில் சோழிய வெள்ளாளா் சங்கம் சாா்பில், வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வ.உ.சிதம்பரனாா் உருவச்சிலைக்கு, மூக்கணாங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிவசாமி தலைமையில் தமிழக சா்வ வெள்ளாளா் பிள்ளைமாா் பேரவை நிறுவனத் தலைவா் ராஜேஷ் குமாா், நகரப் பொறுப்பாளா் பெரியசாமி, சிக்கல் ராஜேந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட வ.உ.சி. பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளா் அங்கு பசுபதி, அமைப்பாளா் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பேரவையைச் சோ்ந்த வடிவேலன், ஜிம் சிவா, காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com