கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் வையாபுரிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகள் நவமணி(40) என்பவா் புதன்கிழமை இரவு கரூா் காந்திபுரத்தில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை அருகே நடந்து சென்றாா். அப்போது பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் திடீரென நவமணி அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.