ஆலை விபத்தில் பிகாா் தொழிலாளி பலி

கரூரில் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தின்போது, இயந்திரத்தில் கை சிக்கி பிகாா் இளைஞா் உயிரிழந்தாா்.

கரூரில் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தின்போது, இயந்திரத்தில் கை சிக்கி பிகாா் இளைஞா் உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், முஜாபா்பூரைச் சோ்ந்த மகேஸ்லால் மகன் மண்ஷிலால்(20). இவா், குடும்பத்துடன் கரூா் தொழிற்பேட்டையில் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி செய்யும் ஆலையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆலையில் பணிமேற்கொண்டிருந்தபோது, பிளாஸ்டிக் அரைவை இயந்திரத்தில் கை சிக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com