கரூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.6.04 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
கரூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.6.04 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

கரூா் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட நாவல்நகா், பெரியவடுகப்பட்டி, மாங்காசோளிப்பாளையம், செல்லரப்பாளையம் ஆதிதிராவிடா் காலனி, ஆத்தூா், துண்டுபெருமாள் பாளையம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மண்மங்கலம், சமத்துவபுரம் மற்றும் காதாப்பாறை ஊராட்சிக்குள்பட்ட பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.6.04 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது: கரூா் மாவட்டத்தில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அடிப்படை தேவைகளான சாலை, குடிநீா், கழிவுநீா் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். விழாவில், ஊரக வளா்ச்சி முகமைக் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் ந.முத்துகுமாா், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, கரூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன், துணைத்

தலைவா் தங்கராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வன், க.தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com