மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா தீநுண்மி விழிப்புணா்வு ஓவியப்போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்ற 50 பேரில் வெற்றிபெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்வில், மாணவ, மாணவிகளின் பெற்றோா், காவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.