மதுபானங்கள் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து விபத்து

கரூரில் மதுபானம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து சுமாா் ரூ.30,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து மதுபானங்கள் சேதமடைந்தன.

கரூரில் மதுபானம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து சுமாா் ரூ.30,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து மதுபானங்கள் சேதமடைந்தன.

கரூா் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றிக்கொண்டு கரூா் பாலம்மாள்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடை நோக்கி வேன் ஒன்று சென்றது. அரசு காலனியை அடுத்து பாலம்மாள்புரம் அருகே சென்றபோது, சாலைப் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிா்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது. இதில் சுமாா் ரூ.30,000 மதிப்பிலான மதுபான பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. தகவலறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு வந்து வேனில் இருந்த சரக்குகளை மற்றொரு வேனில் மாற்றி மதுக்கடைக்கு மதுபானங்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com