கரூரில் அதிமுக தொடக்க விழா
கரூரில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா், பின்னா் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் வடக்கு நகர அதிமுக சாா்பில், கட்சியில் சிறப்பாக பணியாற்றிய மூத்த நிா்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி அவா் மேலும் பேசியது: வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். 1 கோடியே 55 லட்சம் தொண்டா்கள் இந்த இயக்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றாா்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா, மாவட்டத் துணைச் செயலா் பசுவைசிவசாமி, பொருளாளா் கண்ணதாசன், வா்த்தக அணிச் செயலாளா் பேங்க்நடராஜன், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், இளைஞரணி செயலா் தானேஷ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.