கரூா்: கரூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,771 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,341 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு வெவ்வேறு நாள்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 43 போ் பலியாகியுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் 387 போ் உள்ளனா்.