பெரம்பலூா் மாவட்டத்தில்தற்செயல் கவன ஈா்ப்பு போராட்டம்:109 ஊராட்சி செயலா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்செயல் கவன ஈா்ப்பு போராட்டத்தில் 109 ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்செயல் கவன ஈா்ப்பு போராட்டத்தில் 109 ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியம், தெற்குத்திட்டை ஊராட்சி செயலா் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வேண்டும். பெண் ஊராட்சித் தலைவா்களுக்கு பதிலாக அவா்களது கணவா், உறவினா்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈா்ப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஞானசேகரன் தலைமையில், 15 பெண்கள் உள்பட 109 ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com