கரூரில் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் பூமிபூஜை

கரூா் மாவட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் பூமி பூஜையைத்தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் பூமி பூஜையைத்தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்டம், கே. பேட்டை ஊராட்சியில் உள்ள வீரவல்லி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி ரூ. 6.37 லட்சம் மற்றும் சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தனிநபா் குடிநீா் இணைப்பு 222 வீடுகளுக்கு ரூ.15.43 லட்சம் மதிப்பிலும், பாப்பக்காபட்டி ஊராட்சியில் பெரியகுளத்தூா் மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி அருகில் 140 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் ரூ.16.85 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு பணிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் அமைச்சா் பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் எம்.எஸ். கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com