குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே குடும்பத் தகராறில், தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாா். குழந்தைகள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூா்: கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே குடும்பத் தகராறில், தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாா். குழந்தைகள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாலாபேட்டையை அடுத்த வீரியபாளையம் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(30). இவா்களுக்கு சுபிக்ஷா (8), கிஷாந்த் (5) மற்றும் மூன்று வயதில் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமி அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், செந்தில்குமாா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த முத்துலட்சுமி அரளி விதையை அரைத்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளாா். இதில் மயங்கிக் கிடந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு முசிறியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்தாா். குழந்தைகள் மூவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். லாலாபேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com