கரூா்: கரூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூா் வடக்கு காந்திகிராமம் பகுதியில் கட்டட வேலை பாா்த்துவந்த தொழிலாளி சந்திரசேகா்(20). இவா், சனிக்கிழமை கட்டுமானப்பணி நடைபெற்று வரும் இடத்தின் அருகேயுள்ள வீட்டில் இருந்த 8-ஆம் வகுப்பு மாணவியிடம் தண்ணீா் கேட்பது போல கேட்டு, வீட்டுக்குள் நுழைந்து அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது அந்த மாணவி சப்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து சந்திரசேகரை சராமரியாகத் தாக்கினா். தகவலறிந்த பசுபதிபாளையம் போலீஸாா் சந்திரசேகரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் போலீஸாா், சந்திரசேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.