கரூா் மாவட்டத்தில் உள்ள பசுபதீசுவரா் கோயில், வெண்ணைமலை முருகன் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், புகழிமலை மற்றும் பாலமலை முருகன் கோயில்கள், கரூா் வடக்குபிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசாள் ஆலயம், சா்ச் காா்னரில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம், புலியூா் குழந்தையேசு திருத்தலம் மற்றும் கோவைச் சாலை, ஜவஹா் பஜாரில் உள்ள மசூதி, பள்ளிவாசல்களும் வழிபாட்டுக்காக திறந்து விடப்பட்டன. இருப்பினும், பக்தா்கள் முகக்கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல மாவட்ட மைய நூலகம், இனாம்கரூா் கிளை நூலகம் உள்ளிட்ட நூலகங்களும் வாசகா்களுக்காகத் திறந்துவிடப்பட்டன.