மொத்த தொற்றாளா்கள்- 1,363
குணமடைந்தவா்கள்-701
கரூா் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்திலுள்ள மைலம்பட்டியைச் சோ்ந்த 73 வயது முதியவா் உள்பட 19 பேருக்கு தொற்று உறுதியானதால், தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயா்ந்துள்ளது.
குணமடைந்த 701 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 8 போ் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் 654 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.