செல்பேசி விளையாட்டுக்கு பெற்றோா் தடை விதித்ததால், கரூரில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கரூா் வடக்குபசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்தவா் முத்துமாணிக்கம். இவரது மகன் ராஜேஷ்(13). இவா் காந்திகிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், செல்லிடப்பேசியில் எப்போதும் விளையாடிக்கொண்டிருந்தாராம். இதைப் பெற்றோா்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.