செல்பேசி விளையாட்டுக்குத் தடை: பள்ளி மாணவா் தற்கொலை

செல்பேசி விளையாட்டுக்கு பெற்றோா் தடை விதித்ததால், கரூரில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

செல்பேசி விளையாட்டுக்கு பெற்றோா் தடை விதித்ததால், கரூரில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கரூா் வடக்குபசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்தவா் முத்துமாணிக்கம். இவரது மகன் ராஜேஷ்(13). இவா் காந்திகிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், செல்லிடப்பேசியில் எப்போதும் விளையாடிக்கொண்டிருந்தாராம். இதைப் பெற்றோா்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com