மதிமுக நிா்வாகிகள் கூட்டம்

கரூரில் மதிமுக நகர செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூரில் மதிமுக நகர செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகர அவைத்தலைவா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் கே.ஆா்.சண்முகம், ஆா்த்தியா பொன்னுசாமி, ஏஒன் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சுமங்கலி செல்வராஜ், மாநில மாணவா் அணி செயலாளா் பால.சசிகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், பேரறிஞா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, கரூா் நகரில் 20 இடங்களில் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது, கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் நாசரேத் துரை மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com