கரூா்,செப்.18: குளித்தலை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
குளித்தலை அருகிலுள்ள மேலபுதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (70). காவல்காரன்பட்டியில் பழக்கடை நடத்தி வந்தாா். மூட்டு வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் வலி தீரவில்லையாம்.
இதனால் ஆா்.டி.மலைப் பகுதியிலுள்ள அம்மன்பாறை குளத்தில் வியாழக்கிழமை இரவு கருப்பையா குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.